மாரியம்மன் கோவிலில் மளமளவென மடிந்து கிடக்கும் மீன்கள்…!!!

பிரசிதிபெற்ற தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் மீன்கள் இறந்து மிதந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Image result for thanjavur punnainallur mariamman kovil
புகழ்பெற்ற தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு நேற்று(ஞாயிற்றுக் கிழமை)பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. முடி காணிக்கை செலுத்தி விட்டு குளிக்கச் சென்ற பக்தர்கள் மாரியம்மன் தெப்பக்குளத்தில் மீன்கள் இறந்து மிதந்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
Related image
இதனால் தெப்பக்குளத்தில் துர்நாற்றமும் அதிகளவில் வீசியது.இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தஞ்சை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Image result for thanjavur punnainallur mariamman kovil

மேலும் தெப்பக்குளத்தில் விஷம் கலக்கப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே தெப்பக்குளம் சரியாக பராமரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் ஒருபக்கம் எழுந்துள்ளது.
DINASUVADU
author avatar
kavitha

Leave a Comment