மாணவிகளை தவறான வழிக்கு அழைத்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் விசாரணைக்கு உத்தரவிட்டது ஏன்?

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மாணவிகளை தவறான வழிக்கு அழைத்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், ஆளுநர் விசாரணைக்கு உத்தரவிட்டதில் குழப்பம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 263வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை விவகாரம் குறித்து, துணை வேந்தர் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில், திடீரென ஆளுநர் விசாரணைக்கு உத்தரவிட்டதில் குழப்பம் இருப்பதாக கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment