மனைவியின் பாசத்தை பெற கணவன் செய்ய வேண்டியவை..!!

இல்லற வாழ்வில் “கட்டாயம்” எனும் வார்த்தை வரும் போது, சில விஷயங்களில் ஆண்கள் குறையின்றி இருக்க வேண்டும் என பெண்களால் எதிர்பார்க்கப்படுகிறது
காலை எழுந்ததும், ஹஸ்கி குரலில் ஆண்கள் மனைவியை கொஞ்சுவது அவசியம். இது, கணவன் மனைவி உறவை வலுப்படுத்துவது மட்டுமின்றி, அன்றைய நாளை மகிழ்வாக நகர்த்தி செல்லவும் உதவுமாம்.
நாலு ஊருக்கு கேட்கும் படி பேசும் ஆண்களில் பெரும்பாலானோர், செயல்முறை என்று வந்துவிட்டால் பெட்டி பாம்பாக அடங்கிவிடுவார்கள். அப்படி அல்லாமல், கட்டிப்பிடிப்பதில் வல்லவர்களாக இருக்க வேண்டும் (வலுவாக அல்ல, வல்லவர்களாக)
தான் மட்டுமின்றி தன்னையும், தன்னை சுற்றியுள்ளவர்களையும் மகிழ்வாக வைத்துக்கொள்ளும் தன்மை உடையவராக ஆண்கள் இருக்க வேண்டியது அவசியம். முகத்தை “உர்ர்ர்” என்று வைத்துக் கொண்டே இருந்தால், மனைவி கூட அருகே வர பயப்படுவாள்.
தவறு செய்தால் ஒப்புக்கொள்ளும் குணம் இது மனித இனத்திற்கு அப்பாற்பட்ட குணாதிசயம். அப்படி, தாங்கள் செய்த தவறுகளை ஆண்கள் ஒப்புக்கொண்டால், இல்வாழ்க்கை, நல்வாழ்க்கையாக அமையும்.
DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment