மதுரையில் மத்திய – மாநில அரசுகளின் கூட்டு முயற்சியால் எய்ம்ஸ்!மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,மத்திய – மாநில அரசுகளின் கூட்டு முயற்சியால் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதாக தெரிவித்துள்ளார்.

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டும் விழா விரைவில் நடைபெறும் என்றும், அதற்கு பிரதமர் மோடி வரவேண்டும் என்பதே விருப்பம் என்றும் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment