போலீஸில் சிக்கிய நடிகர் ஜெய் விதிமுறைகளை மீறியதாக அபராதம் விதிப்பு..!

காரில் அதிக இரைச்சலை தரும் கருவியை பொருத்தியதாக போலீசார் சோதனையில் சிக்கிய நடிகர் ஜெய்க்கு ரூ.1500/- அபராதம் விதிக்கப்பட்டது.

சென்னை நுங்கப்பாக்கம் அருகே போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது பாட்டில் சைலென்சர் என்ற கருவியை பொருத்தி அதிவேகமாக வந்த காரை நிறுத்தினர்.காருக்குள் நடிகர் ஜெய் இருப்பதை பார்த்து போலீசார் ரசிகர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டிய நீங்களே இப்படி விதிமுறைகளை மீறலாமா என கேள்வி எழுப்பினார்.

உடனே காருக்குள் இருந்த ஜெய் வெளியே வந்து வருத்தம் தெரிவித்தார்.இதனை அடுத்து அவர் இது போன்ற அதிக சத்தம் எழுப்பும் சைலென்சர் களை உபோயகித்தால் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள் , மாணவர்கள் பாதிப்படைவார்கள் ஆதலால் யாரும் இது போன்று செயல்களை தவிர்க்கவும்.என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment