போயஸ் கார்டனில் பாதாள அறையா..?? – சர்ச்சைக்குரிய தகவல்

 
மறைந்த ஜெயலலிதா வசித்த, வேதா இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்றப் போவதாக, அரசு அறிவித்து உள்ளது. அதற்காக, பல்வேறு துறை அதிகாரிகள் கொண்ட குழு, இல்லத்தை ஆய்வு செய்துள்ளது.இது குறித்து, கலெக்டர் அன்புச்செல்வன், நிருபர்களிடம் கூறுகையில், ”ஜெயலலிதா அவர்கள் வசித்த வீட்டை கையகப்படுத்தும் பணி, நான்கு மாதங்களுக்குள் முடிக்கப்படும். இன்றைய தேதியில், அவர்களுக்கு நேரடி வாரிசு யாரும் கிடையாது. ஆய்வுப்பணி முடிந்து, நிலம் கையகப்படுத்தும் போது, பொது அறிவிப்பு வெளியிடுவோம். அப்போது, உரிமை கோருபவர்கள், ஆட்சேபனை தெரிவித்தால், அதற்கேற்ப, எங்கள் நடவடிக்கை அமையும்,” என்றார்.’போயஸ் கார்டன் இல்லத்தில், பாதாள அறை உள்ளதா…??’ என்ற கேள்விக்கு, கலெக்டர் பதில் அளிக்க மறுத்து விட்டார். இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment