பெரிய அளவிலான தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன

பெரிய அளவிலான தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன

2017ம் ஆண்டில் சென்னை நகரில் நடத்தப்பட்ட தேடல்களின் போது 22,575 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் 748 கிலோ கஞ்சா காவல்துறையால் கைப்பற்றப்பட்டது என்று காவல்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.கஞ்சா,குத்கா மற்றும் பல தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வதனால், அந்தந்த காவல்துறை அதிகாரிகளின் தலைமையின் கீழ், சென்னை காவல்துறை சிறப்பு குழுக்களை அமைத்தது. ஜனவரி- 1, 2017 முதல் டிசம்பர்-31, 2017 வரை நடத்தப்பட்ட தேடலில் மொத்தம் 3039 வழக்குகளும் 3281 நபர்களை கைதும் செய்துள்ளதாக கூறியுள்ளனர்.மேலும் இந்த குற்றங்களுக்கு தொடர்பு உள்ள  நபர்களும் குண்டர்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *