பெட்ரோல் – டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு..!!81 ரூபாயைக் கடந்தது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை..!!

பெட்ரோல்- டீசல் ஆகியவற்றின் விலையால் நுகர்வோருக்கு சுமை அதிகரித்துள்ள நிலையில்,  அவற்றின் விலை இன்று மேலும் உயர்ந்திருக்கிறது.

நாடு முழுவதும் தொடர்ந்து 14ஆவது நாளாக பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று 80 ரூபாய் 95 காசுகளுக்கு விற்பனையான பெட்ரோலின் விலை, இன்று காலையில், 16 காசுகள் அதிகரித்து, 81 ரூபாய் 11 காசுகளாக நிர்ணயம் செய்யப்ப்ட்டுள்ளது.

இதேபோன்று நேற்று 72 ரூபாய் 74 காசுகளுக்கு விற்பனையான டீசல், 17 காசுகள் உயர்ந்து 72 ரூபாய் 91 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிக்குமென இந்தியன் ஆயில் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

author avatar
kavitha

Leave a Comment