பேஸ்புக்கின் தற்போது வளர்ந்து வரும் மற்றொரு நிறுவனம் இன்ஸ்டாகினாம். இதன் வருமானம் தற்போது அதிகரித்துள்ளதால் அதன் மீது தனிகவனம் செலுத்த.பேஸ்புக் முடிவெடித்துள்ளது. இதனால் இன்ஸ்டாகிராம் தற்போது புதிய அப்டேட்களை கொண்டுவந்துள்ளது.
இன்ஸ்டாகிராம் தங்களது பக்கத்தை மேம்மடுத்தியுள்ளது. அதாவது பயணர்கள் தங்களது நெருங்கிய வட்டத்திற்குள் ஒரு ஸ்டோரியை பகிர்ந்துகொள்ள முடியும். அதனை நண்பர்கள் வட்டத்திற்குள் இருப்பவர்கள் மட்டும் பார்க்க முடியும். நீங்கள் ஒருவருடைய நெருக்கமான நண்பர்கள் லிஸ்ட்டில் இருந்தால் அவர்களுடைய புரோஃபைல் போட்டோவிலிருக்கும் பச்சை நிற வட்டத்தில் இருக்கும் ஸ்டோரியினைக் காணமுடியும். நீங்கள் அந்த ஸ்டோரியை பார்த்தால், அதில் பச்சை நிற பேட்ஜ் தோன்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்ஸ்டாகிராமில் முக்கிய பொறுப்பில் இருந்த அடாம் முசேரி தற்போதுஅதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
DINASUVADU