நாம் அன்றாட உணவில் பீட்ரூட்டை சேர்த்து கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம். பீட்ரூவ்ற்றில் சுண்ணாம்புச்சத்து, மெக்னீசியம், இரும்புசத்து, சோடியம், பொட்டாசியம், தாமிரம், கந்தகம், குளோரின், வைட்டமின் சி என பல சத்துக்கள் நிறைந்துள்ளன.
இரத்தம் சம்பந்தமான நோய்கள் :
இரத்தத்தில் சிவப்பணுக்கள் அதிகரிக்க வேண்டுமானால் பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக உன்ன வேண்டும். மேலும் பல்வலி, தலைவலி போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபட ஜூஸ் பருகி வரலாம். இயற்கையாகவே பீட்ரூட் இரத்தம் தொடர்பான நோய்களைத் தீர்க்கும் ஆற்றல் உடையது. பீட்ரூட்டை சமைத்து சாப்பிட்டால், இரத்த சோகை பிரச்சனை ஏற்படாது.
வயிற்று பிரச்சனைகள் :
தேங்காய் எண்ணெயுடன் பீட்ரூட் சாறை கலந்து தீப்பட்ட காயத்தில் தொடர்ந்து பூசி வந்தால் தீக்காயம் விரைவில் குணமடையும். தீப்புண் கொப்புளமாகாமல் தவிர்க்கலாம். பீட்ருட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து பருகி வந்தால் சிறுநீரகங்களுடன் பித்தப்பை சுத்திகரிக்கப்படும். மேலும் பீட்ரூட் சாற்றில் தேன் கலந்து பருகி வந்தால் அல்சர் விரைவில் குணமாகும். பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானக் கோளாறுகளை தீர்க்கும்.
கல்லீரல் பிரச்சனை :
பீட்ரூட்டை வேகவைத்த தண்ணீரில் வினிகரை கலந்து பொடுகு தொல்லை உள்ள இடத்திலும் மற்றும் ஆறாத புண்கள் மேல் தடவி வந்தால் குணமாகும். கல்லீரலில் ஏற்படும் கோளாறுகளுக்கும், பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் மிகச் சிறந்த டானிக் ஆகும்.
மஞ்சள் காமாலை :
பீட்ரூட்டை சமையல் செய்து சாப்பிட்டால், அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் குணமாகும். பல மாதங்களாக மலசிக்கலாலும், மூலம் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு இரவு படுக்க போவதற்கு முன்பாக, பீட்ரூட் சாறை நீருடன் கலந்து அரை டம்ளர் அளவிற்கு அருந்தி வந்தால் குணமாகும்.
புற்றுநோய் :
புற்றுநோயினால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் நோயாளிகளும், பீட்ரூட் ஜூஸ் தினமும் ஒரு டம்ளர் பருகி வந்தால் புற்றுநோய் பரவுவது தடுக்கப்படும். ஆரம்ப நிலையிலுள்ள புற்றுநோயை குணமாக்கும் வல்லமையும் பீட்ரூட்டுக்கு உள்ளது.