பிரபல நடிகரின் படப்பிடிப்பில் பயங்கர குண்டு வெடிப்பு- பதற்றத்தில் படக்குழு!

பாலிவுட் சினிமாவை தாண்டி தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பரீட்சை பட்டவர் நடிகர் அக்ஷய் குமார். தற்போது இவர் ரஜினியுடன் 2.0 படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இவர் தன்னுடைய கேசரி என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். சதாரா மலைப்பிரதேசத்தில் உள்ள புத்ருக் கிராமத்தில் நடந்து வருகிறது. அப்போது திடீரென அங்கு தீப்பிடித்தது, படத்தின் சண்டை காட்சியின் போது வெடித்த குண்டு காரணமாக தீ பரவியதாக கூறப்படுகிறது. இதனால் படப்பிடிப்பில் பல லட்சம் ரூபாய் செலவில் போட்டிருந்த பிரம்மாண்டமான செட் முற்றிலும் கருகியது.

இந்த விபத்தில் படக்குழுவினருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment