பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி குற்றசாட்டு….

  • காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடி மீது குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடி மீது குற்றம் சாட்டியுள்ளார். தலைநகர் இம்பாலில் நடந்த பேரணி ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி ஒரு கோடி வேலைவாய்ப்புகளை அழித்திருப்பது நிர்வாகத்திறமையின்மையை காட்டுகிறது என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என்று உறுதிமொழி அளித்த பிரதமர் மோடி, கடந்த 2018ம் ஆண்டில் ஒரு கோடி வேலைவாய்ப்புகளை அழித்துவிட்டார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக மே 19ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் தலைவர்கள் நாடு முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என்று மோடி கூறியது அபத்தமானது, முட்டாள்தனமானது என அவர் விமர்சித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment