பிரதமரின் அடுத்த சுற்று பயணம் ஜெர்மனி நோக்கி காரணம் இதுவா ..!

பிரதமரின் அடுத்த சுற்று பயணம் ஜெர்மனி நோக்கி காரணம் இதுவா ..!

வரும் 20ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலை சந்தித்து பேசவுள்ளார்.

பிரதமர் மோடி வருகிற 16 ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை ஸ்வீடன், பிரிட்டன் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

20ஆம் தேதி பயண நிறைவின் போது இந்தியா திரும்பும் வழியில் பெர்லின் செல்ல பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.

அங்கு ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலை மெர்க்கலை அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதில் இருநாட்டு உறவுகள், உலக பிரச்சனைகள் தொடர்பாக இருவரும் விவாதிக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *