பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் இலவசமாகவே வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலையின் சிலைக்கு அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி. கருப்பணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன் , இதுவரை இல்லாத அளவுக்கு பாடப்புத்தகங்கள் உயர் தரத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளதால், கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.