பாகிஸ்தான் மீது இந்தியா 1300 முறை தாக்குதல் நடத்தியுள்ளது : பாக் செய்தி தொடர்பாளர்

இந்திய ராணுவமானது, பாகிஸ்தான் மீது 1300 முறை தாக்குதல் நடத்தியதாகவும், அதனால் சுமார் 52 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 175 பேர் கடும் காயமுற்றதாகவும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குற்றம் சாடியுள்ளார்.

பாகிஸ்தான், இஸ்லமபாத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த  பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகம்மது பைசல் கூறும்போது, ‘ காஷ்மீர் மீது இந்திய அரசாங்கம் அடக்குமுறைநடத்தி வருகிறது. இந்த விவகாரத்தை உலக நாடுகள் கவனத்தில் இருந்து திசை திருப்பும் முயற்சியே, பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்துவது.

நடப்பாண்டில் மட்டும் 1,300 முறை அத்தகைய தாக்குதல்கள் நடத்தியுள்ளது. அவற்றில் 52 பாகிஸ்தானியர்கள் உயிரிழந்தனர்.  175 பேர் காயம் அடைந்துள்ளனர்.இந்தியா இத்தகைய அத்துமீறலை கைவிட வேண்டும். மேலும் எங்கள் நாட்டில் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கவில்லை’ என்று பேட்டியளித்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment