பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு..!! நிரம்பியது பில்லூர் அணை..!!பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!!

மேட்டுப்பாளையம்: நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள பில்லூர் அணை நிரம்பியது.பில்லூர் அணையின் மொத்த உயரம் 100 அடி. அணையின் நீர் மட்டம் 97 அடியை நெருங்கும்போது, பாதுகாப்பு கருதி திறந்துவிடப்படும்.
அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அணைக்கு 24 ஆயிரம் கன அடிநீர் வந்து கொண்டுள்ளதால், அணையின் நீர் மட்டம் 97 அடியை எட்டியது. இதனால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
DINASUVADU
 

author avatar
kavitha

Leave a Comment