பாலியல் வன்கொடுமையில் குற்றவாளிகளுக்கு அரசு உரிய தண்டனை பெற்றுத்தரும் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறுகையில், தருமபுரியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமையில் குற்றவாளிகளுக்கு அரசு உரிய தண்டனை பெற்றுத்தரும். பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்துக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.