பள்ளி மாணவிகள் பாலியல் புகார் தெரிவிக்க போக்சோ பெட்டி…குஜராத்தில் புதிய முயற்சி…!!

பள்ளியில் மாணவிகள் பாலியல்  தொந்தரவை தெரிவிக்க பள்ளியில் போக்சோ பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

சமீப காலமாக பெண் குழந்தைகள், இளம் பெண்கள், வயதான பெண்கள் என அனைத்து வயது பெண்களும் ஏற்பட்ட பாலியல் தொந்தரவை ‘#Me Too’ மூலமாக தெரிவித்து வருகின்றனார்.இதனால், பாலியல் பாதிப்புகள் குறித்து தெரிவிக்கும் ‘#Me Too’ தளம் உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.விதமாக நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போது குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு சட்டமான போக்சோ என்ற பெயரில் பாலியல் புகார் தெரிவிக்கும் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.இது ரகசியம் காத்து, அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.இந்த முயற்சி நாடு முழுவதும் முன்மாதிரியாக கருதப்படுகிறது.

dinasuvadu.com 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment