பம்பை ஆற்றில் உள்ள பழைய வேட்டிகளை கேரளாவுக்கே அனுப்பிய தமிழக அரசு நிர்வாகிகள்

கார்த்திகை மாதம் தொடங்கியதும்  சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல பக்தர்கள் தமிழகம் , கர்நாடகா என பல்வேறு மாநிலங்களிலிருந்து சபரிமலைக்கு செல்ல ஆரம்பித்துவிட்டனர். 

இங்கு வரும் பக்தர்கள் பம்பை ஆற்றில் குளித்துவிட்டு வேட்டி, துண்டுகளை ஆற்றிலேயே விட்டுவிடுகின்றனர். இதனால் பம்பை ஆற்றில் துணிகள் நிறைந்து அசுத்தம் அடைகிறது. இதனால் கேரளா உயர்நீதிமன்றம் இதனை அப்புறப்படுத்த உத்தரவிட்டது. 

ஆதலால் கோவில் நிர்வாகம் பம்பை ஆற்றில் உள்ள துணிகளை அப்புறப்படுத்தி  தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள சருத்திபட்டியில் உள்ள ஓர் தனியார் தோட்டத்தில் காய வைத்துள்ளனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் இதனால், அப்பகுதியில் மாசு ஏற்படுவதாகவும், டெங்கு போன்ற நோய்கள் பரவ வாய்ப்புள்ளதாக  புகார் கொடுத்தனர். இதன்பேரில் பெரியகுளம் தாசில்தார் கிருஷ்ணகுமார் மற்றும் பெரியகுளம் காவல்துறையினர் தோட்டத்திற்கு நேற்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அந்த துணிகளை அப்புறப்படுத்தி கேரள மாநில எல்லைக்குள் கொண்டு செல்ல உத்தரவிட்டுள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment