பண மோசடி செய்ததாக நடிகர் விமல் மீது தயாரிப்பாளர் புகார்..!!

பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘மன்னர் வகையறா’. இந்தப் படத்தில் ‘கயல்’ ஆனந்தி ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் நாளை வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் கணேசன் நடிகர் விமல் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது, “ஜி.கே.ஸ்டூடியோ நிறுவனம் சார்பில் ‘மன்னர் வகையறா’ என்ற பெயரில் புதிய படம் தயாரித்துள்ளோம். அந்த படத்தின் கதாநாயகனாக நடிகர் விமல் நடித்துள்ளார். குடியரசு தினத்தன்று படம் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் எனது பெயர் இல்லை. நான் ரூ.1.75 கோடி படத் தயாரிப்புக்கு செலவு செய்துள்ளேன். எனக்கு ரூ.2.15 கோடி, படம் வெளியானவுடன் தர வேண்டும், என்ற ஒப்பந்தம் உள்ளது. ஆனால் எனக்கு அந்த பணத்தை கொடுக்காமல் விமல் உட்பட 3 பேர் ஏமாற்ற முயற்சி செய்கின்றனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தினை வாங்கி தருமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது

author avatar
Dinasuvadu desk

Leave a Comment