பணியிடமாறுதல் கலந்தாய்வு தேதி அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவிப்பு!

பள்ளிக் கல்வித்துறை,நடப்பு கல்வியாண்டில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு ஜூன் 11 மற்றும் 12ஆம் தேதிகளில் தொடங்கும் என அறிவித்துள்ளது.

பணியிட மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும், அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் அல்லது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், வட்டார கல்வி அலுவலகத்தில் விண்ணங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

நிரப்பிய விண்ணப்பங்களை ஜூன் 7ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் என்றும், தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 11ஆம் தேதி தொடங்கவுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 12ஆம் தேதி தொடங்கும் என தெரிவித்துள்ள பள்ளிக்கல்வித்துறை, ஜூன் 21 வரை கலந்தாய்வு நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment