நெல்லை வியாபாரி கொடூர கொலை..!!

நெல்லை வியாபாரி கொடூர கொலை..!!

கடையம் அருகே நள்ளிரவில் பயங்கரம்.

 
திருநெல்வேலி மாவட்டம் கீழ கடையம் ஆழி புதத்தான் கோவில் தெருவை சேர்ந்த பொன்னுசாமி மகன் நரசிம்மன்(55) நரசிம்மன் கடையம் ரயில் நிலையம் அருகே அவருக்கு சொந்தமான இடத்தில் பொட்டிக்கடையுடன் கூடிய டீ கடையும் நடத்தி வந்தார்.கூடவே வட்டி தொழிலும் செய்து வந்தார்.இவரும் மனைவி விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்கின்றார்.இவர் இரவு சாப்பிட்டு விட்டு கடையில் உள்ள கீழ் தளத்தில் தூங்குவார்.சம்பவத்தன்று இரவு சாப்பிட்டு கடையில் தூங்கிய நரசிம்மன் காலை கடையை திறக்கவில்லை.சந்தேகம் அடைந்த அவரின் தம்பி கடையை திறந்து பார்த்த போது கடையின் உள்ளே கை  , கால்கள் மற்றும் உடம்பில் பலத்த வெட்டு காயங்களுடன் நிர்வாணமாக பிணமாக கிடந்தார்.உடனே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நரசிம்மனின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.காவல்துறையினர் கொலை சம்மந்தமாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்…

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *