நிபா வைரஸ் தமிழகத்தில் எந்தப் பகுதியிலும் கண்டறியப்படவில்லை!சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன்

சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன்,தமிழகத்தில் எந்தப் பகுதியிலும் இதுவரை நிபா வைரஸ் கண்டறியப்படவில்லை எனச்  தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் நிபா வைரஸ் பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், எந்தப் பகுதியிலும் இதுவரை நிபா வைரஸ் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவித்தார். நிபா வைரஸ் குறித்த வதந்தியை நம்பி அச்சப்பட வேண்டாம் என்றும் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment