நாளை ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம்…!

நாளை காலை 11 மணிக்கு ராஜஸ்தான் மாநில காங்கிரஸ்  சட்டமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம்  நடைபெறுகிறது.

இன்று காலை 8 மணிக்குத் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.அதன்படி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.சத்தீஸ்கர்,மத்திய பிரதேசம் , ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.அதேபோல் தெலுங்கானாவில் சந்திரசேகரராவின் கட்சியும்,மிசோரமில் மிசோ தேசிய முன்னணியும் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில்  நாளை காலை 11 மணிக்கு ராஜஸ்தான் மாநில காங்கிரஸ்  சட்டமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம்  நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் யார் என்பது குறித்து முடிவெடுக்கப்பட உள்ளது.

Leave a Comment