நாய்க்கு கல்லறை கட்டிய பெண் தாசில்தார்!!

நாய்க்கு கல்லறை கட்டிய பெண் தாசில்தார்!!

மத்திய பிரதேசத்தில், உயிரிழந்த தனது வளர்ப்பு நாய்க்கு அரசு நிலத்தில் கல்லறை கட்டிய பெண் தாசில்தாரின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் Sidhi மாவட்டத்தை சேர்ந்த அமிதா சிங்கின் வளர்ப்பு நாய், அண்மையில் இறந்தது.

இதையடுத்து அங்குள்ள அரசு நிலத்தில், அந்த நாய்க்கு அமிதா கல்லறை கட்டினார். எனினும், விதிமீறி அரசு நிலத்தை தாசில்தாரே ஆக்கிரமிக்கலாமா என்று சிலர் விமர்சனத்தை முன்வைத்தனர்.

அதற்கு பராமரிப்பு இன்றி இருந்த இடத்தில் கல்லறை கட்டி தற்போது தான் பராமரித்து வருவதாக அமிதா கூறியுள்ளார். அங்கு ஏதேனும் கட்டிடம் கட்டப்படுமேயானால், கல்லறையை அகற்றிக் கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *