நாட்டின் ராணுவத்தை பலவீனப்படுத்த காங்கிரஸ் முயற்சிக்கிறது – பிரதமர் மோடி குற்றச்சாட்டு….!!

நாட்டின் ராணுவத்தை பலவீனப்படுத்த காங்கிரஸ் முயற்சி செய்வதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
உத்திரபிரதேசம் மாநிலம் ரேபரேலியில் உள்ள ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையை பார்வையிட்ட பிரதமர் மோடி, அங்கு தயாரிக்கப்பட்ட 900-வது ரெயில் பெட்டியை கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். இதைத்தொடந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ரேபரேலி வளர்சிக்காக முந்தைய காங்கிரஸ் ஆட்சி எதுவும் செய்யவில்லை என விமர்சித்தார்.
பா.ஜ.க. ஆட்சியில் ரேபரேலி தொகுதி மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறிய அவர், நாட்டின் ராணுவத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினார். ஆனால், ராணுவத்தை பலப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment