நாட்டாமைக்காரனின் ஆணவ போக்கை சகித்து கொள்ளமுடியாது..!!பொருளாதார பயங்கரவாதம்..!ஈரான் காட்டம்..!

அமெரிக்கா நாடு ஈரான் மீது விதித்துள்ள தடைகள் எல்லாம் பொருளாதார பயங்கரவாதம்  இதை சகித்துக்கொள்ள முடியாது என்று ஈரான் அதிபர் காட்டமாக கூறியுள்ளார்.

ஈரான் நாட்டில்  பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு
நடைபெற்ற மாநாட்டில் பேசிய அந்நாடு அதிபர் ஹசன் ருகானி அமெரிக்காவை விமர்சித்து பேசினார்.அவர் பேசுகையில்  கவுரவமாக இருக்கும் ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள நியாயமே இல்லாத அநியாயமான மற்றும் சட்டவிரோதமான பொருளாதார தடையும் ஒரு வகை பயங்கரவாதம் தான் என்று தெரிவித்த அவர்  ஈரான் நாட்டின் சுதந்திரம் மற்றும் அடையாளத்திற்கு அமெரிக்கா நமக்கு விடுத்துள்ள அச்சுறுத்தல் என பேசினார்.

மேலும் சீனாவின் மீது அமெரிக்கா  வர்த்தகத்தில்அழுத்தம் கொடுக்கும்போது அது அனைவரையும் பாதிப்புக்கு உள்ளாக்கிறது.மேலும் இப்படி ஒவ்வொரு நாட்டின் மீதும் அமெரிக்கா தடைகளை விதிக்கின்ற இந்த  ஆணவ போக்கை ஈரானால் சகித்துக்கொள்ளக்கூடாது என்றும் தெரிவித்தார்.

author avatar
kavitha

Leave a Comment