நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் அளவிற்கு தமிழகத்தில் பாஜக வலுப்பெற்றுள்ளது..!மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

கீழ்தட்டு மக்களிடம் பாஜக பெற்றுள்ள செல்வாக்கை காட்டும் வகையில் எம்.பி.தேர்தல் இருக்கும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய  அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில்,  நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் அளவிற்கு தமிழகத்தில் பாஜக வலுப்பெற்றுள்ளது .கீழ்தட்டு மக்களிடம் பாஜக பெற்றுள்ள செல்வாக்கை காட்டும் வகையில் எம்.பி.தேர்தல் இருக்கும். டெல்லியில் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் தமிழகத்திற்கு பெரிய இழுக்கை ஏற்படுத்திவிட்டனர் என்றும்  மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment