மாயா, டோரா, அறம் போன்ற படங்களை தொடர்ந்து, நயன்தாரா கதையின் நாயகியாக நடித்து வெளியான படம் கோலமாவு கோகிலா. நெல்சன் இயக்கிய இந்த படம் கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி வெளியானது.
படம் வெளியான முதல் நாளில் விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களின் சிறப்பு காட்சிகள் திரையிடுவது போல் அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிட்டபடி பரபரப்பாக படத்தை வெளியிட்டனர். கூடவே கோலமாவு கோகிலா படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த், டெரெக்டர் சங்கர் ஆகியோரும் பாராட்டு தெரிவித்தனர்.
அதனால் ஆரம்பத்தில் இப்படம் நல்ல வசூலை ஈட்டி வந்த நிலையில், கடந்த 10 நாட்களில் ரூ.20 கோடி வரை வசூலித்துள்ளதாம். கதாநாகியை முன்னிறுத்தின ஒரு படம் இவ்வளவு வசூலித்திருப்பது பெரிய சாதனையாக கருதப்படுகிறது.