நயன்தாராவிற்காக சிங்கப்பூர் மாரியம்மன் கோவிலில் அர்ச்சனை செய்த தீவிர ரசிகர்! வைரல் புகைப்படம்!

நயன்தாராவிற்காக சிங்கப்பூர் மாரியம்மன் கோவிலில் அர்ச்சனை செய்த தீவிர ரசிகர்! வைரல் புகைப்படம்!

தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை எனவும் , ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுவருமான நயன்தாரா, நேற்று முன் தினம் தனது 35வது பிறந்தநாளை கொண்டாடினார். இவர் தனது பிறந்தநாளை காதலன் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து வெளிநாட்டில் கொண்டாடினார்.
இவருக்கு தென்னிந்தியா முழுவதும் ரசிகர்கள் ஏராளம். அதில் சிங்கப்பூரில் இருக்கும் நயன்தாரா ரசிகர் ஒருவர்சிங்கப்பூரில் உள்ள மஹா மாரியம்மன் கோவிலுக்கு சென்று அங்கு நயன்தாராவிற்க்காக அரச்சனை செய்துள்ளார்.

அந்த அர்ச்சனை சீட்டில் நயன்தாராகுரியன் என பெயரிடப்பட்டுள்ளது. அதில், நயன்தாராவின் நட்சத்திரமாக திருவோணம் நட்சத்திரம் என அச்சிடப்பட்டுள்ளது. இந்த அர்ச்சனை சீட்டு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube