நடிகர் விஷாலிடம் இயக்குனர் வசந்தபாலன் கேள்வி…..!!!

தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலிடம் இயக்குனர் வசந்தபாலன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொது நலன் கருதி என்ற படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் வசந்தபாலன், மற்ற மொழிகளில் 6 மாதத்திற்கு முன்பு வந்த படங்களை கூட இணையத்தில் பார்க்க முடியவில்லைஎன்றும், தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் நடத்துபவர்களை கண்டுபிடிக்க முடியவில்லையா அல்லது கண்டுபிடித்து விட்டு அமைதியாக இருக்கிறீர்களா என தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலுக்கு இயக்குனர் வசந்தபாலன் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதனைத் தொடர்ந்து பேசிய இயக்குனர் மிஷ்கின், தமிழ் ராக்கர்ஸை பிடிப்பதற்காக இரவு பகலாக விஷால் உழைத்ததை தான் நேரில் பார்த்ததாக கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment