நடிகர் ரஜினிகாந்த் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் குறித்து கருத்து..!

நடிகர் ரஜினிகாந்த்  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் குறித்து நடவடிக்கை எடுக்காமல் அரசு வேடிக்கை பார்ப்பது புரியாத புதிராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரஜினிகாந்த், ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதனை வலியுறுத்தி கடந்த 47 நாட்களாக போராடி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு போராட்டம் நடத்தி கொண்டிருக்கும் நிலையில், தொழிற்சாலை நடத்த அனுமதி கொடுத்த அரசு, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது புரியாத புதிராக உள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment