நடிகர் பவர் ஸ்டாரை காணவில்லை…பதறிய மனைவி…!!நாடகமா..?? போலீசார் தீவிர விசாரணை..!!

நடிகர் பவர் ஸ்டாரை காணவில்லை…பதறிய மனைவி…!!நாடகமா..?? போலீசார் தீவிர விசாரணை..!!

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை காணவில்லை என்று அவரது மனைவி புகார் அளித்தார் இந்நிலையில் பவர் ஸ்டார் கடன் பிரச்சினையிலிருந்து தப்பிப்பதற்காக அவர் தரப்பில் பொய் புகார் ஏதேனும் அளிக்கப்பட்டுள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகர் பவர் ஸ்டார் சினிவாசனை காணவில்லை என்று அவருடைய மனைவி ஜூலி சென்னையில் உள்ள அண்ணாநகர் காவல்நிலையத்தில்  புகார் ஒன்றை அளித்தார். அநத புகாரில் வெளியில் சென்ற தனது கணவர் சினிவாசன் வீடு திரும்பவில்லை மேலும் கடன் பிரச்சினையால் யாரேனும் கடத்தி சென்றிருப்பார்களோ என சந்தேகம் எழுவதாக கூறியிருந்தார். இந்த புகாரை விசாரித்த அண்ணாநகர் போலீசார் நீலகிரி மாவட்டம் உதக மண்டலத்தில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மிக பத்திரமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து தன் கணவர் சீனிவாசனை பார்க்க ஜூலி தற்போது உதக மண்டலத்திற்கு சென்றிருப்பதாக அவருடைய உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் நடிகர் பவர் ஸ்டார் மீது பல்வேறு கடன் மோசடி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால்  கடன் கொடுத்தவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக பவர் காணாமல் போனதாக நாடகமாடுகிறாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
kavitha
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *