தொலைநோக்கி கொண்டு ராகுல்காந்தி பார்த்தாலும் வெற்றி கிடைக்காது!அமித் ஷா

பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா,காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தொலைநோக்கி வைத்து பார்த்தாலும் அக்கட்சியின் வெற்றியை வரும் நாட்களில் காண முடியாது என கூறியுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற பா.ஜ.க. மாநாட்டில் பங்கேற்றுப்பேசிய அமித்ஷா, காங்கிரஸின் வெற்றி குறித்த கனவுகள் ராகுலுக்கு எப்படி வருகிறது என்பது தமக்கு ஆச்சரியத்தை அளிப்பதாக கூறினார். இதே கூட்டத்தில் பேசிய மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், வரும் 50 ஆண்டுகளுக்கு பா.ஜ.க. ஆட்சியை காங்கிரஸால் அகற்ற முடியாது என்று கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment