தேர்தலை பார்த்து நான் பயப்பட அவசியமில்லை;கங்கை அமரன்.

தேர்தலை பார்த்து நான் பயப்பட அவசியமில்லை;கங்கை அமரன்.

சென்னை:  ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில்  நான் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பாஜக வேட்பாளராக களமிறங்கவில்லை என்று கங்கை அமரன் விளக்கமளித்துள்ளார். இதைப்பற்றி  இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமீபத்தில் எனக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை  பெற்று வந்தேன் . உடல் நலக்குறைவு காரணமாகவே இந்த முறை ஆர்.கே.நகரில் போட்டியிடவில்லை. பா.ஜனதா சார்பில் கரு.நாகராஜன் போட்டியிடுகிறார் என்று அவர் தெரிவித்தார் .
இந்த இடைதேர்தலில் ஆர்.கே.நகர் மக்கள் கரு.நாகராஜனுக்கு  வாக்களித்து பா.ஜனதாவை வெற்றி பெற செய்ய வேண்டும் மற்றும்  பா.ஜனதா அங்கு வெற்றி பெற்றால் அது தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் ஆர்.கே.நகர் தொகுதி மத்திய அரசு ஆதரவுடன் வளர்ச்சி பெறும் என்றார். தேர்தலை கண்டு பயந்து ஓட வேண்டிய அவசியம் இல்லை எனக்கு  என்று கங்கை அமரன் குறிப்பிட்டார். இந்த  செய்தியாளர் சந்திப்பின்போது, பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும்  ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர் ஆனா  கரு.நாகராஜன் ஆகியோர் இருந்தனர் .

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *