தெற்காசிய கால்பந்து போட்டி : பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி….!!!

7 அணிகளுக்கு இடையிலான தெற்காசிய கால்பந்து போட்டியில் வங்காள தேசத்தில் நடந்து வருகிறது. இதன் அரையிறுதிக்கு இந்தியா, பாகிஸ்தான், மாலத்தீவு, நேபாளம் அணிகள் முன்னேறியது. ஒரு அரையிறுதியில் மாலத்தீவு – நேபாளம் அணிகள் மோதின. இதில் மாலத்தீவு 3-0 என வெற்றி பெற்றது. மற்றோரு அரையிறுதியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின.

இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் பாதி நேரத்தில் இரு அணி வீரர்களும் கோல் ஏதும் அடிக்கவில்லை. 2-வந்து பாதி நேரத்தில் இந்தியாவின் மண்வீர் சிங் 48-வது மற்றும் 69-வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் டித்து அசத்தினார். சுமித் பாஸ்சி 84-வைத்து நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

ஆட்டத்தின் கடைசி நேரத்தில் 88-வது நிமிடத்தில் பாகிஸ்தான் வீரர் ஹசன் கோல் அடித்தார். இதனால் இந்தியா 3-1 என வெற்றி பெற்றது. இந்தியா – மாலத்தீவு இடையிலான இறுதி போட்டி செப்டம்பர் 15 -ந் தேதி நடக்கிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment