தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து..!!மதுரையில் அரசுப் பேருந்துகள் மீது கல்வீச்சு..!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து மதுரையில் பல்வேறு இடங்களில் அரசுப் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் மீது கற்கள் வீசப்பட்டன. இன்று அதிகாலை மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 இரு சக்கர வாகனங்களை மர்ம நபர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர்.

அதே போல் மதுரை ஒத்தக்கடை விவசாய கல்லூரி அருகேயும், பெரியார் பேருந்து நிலையம் அருகேயும் சென்று கொண்டிருந்த அரசு பேருந்துகள் மீது மர்ம நபர்கள் கற்களை வீசியதில், கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. மேலும் மூன்று அரசுப் பேருந்துகள் மீது கல் வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவங்களைத் தொடர்ந்து தொடர்ந்து மதுரை முழுவதும் போலீசார் உஷார்ப்படுத்தப்பட்டு, அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

author avatar
kavitha

Leave a Comment