தூத்துக்குடியில் பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்து மாணவி தீக்குளித்து தற்கொலை..!

தூத்துக்குடி அருகே பிளஸ் 2 தேர்வில் மாணவி தோல்வியடைந்ததால் இன்று தீக்குளித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட  சுப்பிரமணியபுரம் கிராமத்தை சார்ந்த மாணவி  பலவேசம் இவரது மகள் முத்து செல்வி இவர் குளத்தூர் அரசு மேல்நிலையப்பள்ளியில் கல்வி பயின்றார். இந்த ஆண்டு மார்ச் , ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வுகளை எழுதியிருந்தார்.தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.இதில் தேர்வு முடிவுகளில்  அவர் 2 பாடங்களில் தோல்வியடைந்துள்ளார். இதனால்  மன உளைச்சலில் இருந்த  முத்துசெல்வி  வீட்டிலிருந்த மண்ணெண்ணெயை அவரது உடலில் ஊற்றி தீக்குளித்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியை மீட்டு துாத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதித்துள்ளனர். சிகிச்சை பலனின்றி அவர் இன்று மாலை உயிரிழந்தார்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment