தூத்துக்குடியில் சங்கு குளிக்க சென்ற மீனவர் திடீர் மரணம் ..!

தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த செய்யது உமர் காத்தான் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் சுனாமி காலனி யாசின் மகன் சம்சுகனி (37), மனோ (35) உள்பட 7 மீனவர்கள் தாளமுத்துநகர் கடற்கரையிலிருந்து சங்கு குளிக்க சென்றனர்.

திருச்செந்தூருக்கு தெற்கே 13 கி.மீ. கடல்மைல் தொலைவில் சங்கு குளித்து கொண்டிருந்தபோது, சம்சுகனி திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார்.

இதையடுத்து, படகை உடனடியாக ஜீவாநகர் கடற்கரைக்கு திருப்பி, சம்சுகனியை திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சம்சுகனி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து கூடங்குளம் கடலோர பாதுகாப்பு குழும காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment