துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

போக்குவரத்து ஊழியர்கள் பல கோரிக்கைகள் முன்வைத்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் 5 நாட்களாக தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில் இது குறித்து பேட்டியளித்த போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், ’15 ஆண்டுகால பிரச்சனையை ஒரே நாளில் தீர்க்க சொல்லி போராடுவது நியாயமற்றது. மேலும், தொழிலாளர்களின் நலன் கருதி தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை வேலைக்கு செல்ல சொல்ல வேண்டும்.
பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர். வேலைக்கு திரும்ப செல்லாத ஊழியர்களுக்கு துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment