துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பதவி விலகல் ..!விலகவில்லை என்றால் இதான் முடிவு ..!ஸ்டாலின் அதிரடி

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் லஞ்ச ஒழிப்புத் துறையின் ஊழல் விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் நிலையில்  உடனடியாக பதவி விலகிட வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் ,பதவி விலக மறுத்தால் முதலமைச்சர் அவரை உடனடியாக நீக்க தமிழக ஆளுநருக்கு பரிந்துரைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் குடும்பத்தினர் மீதான சொத்துக்குவிப்பு புகார் குறித்து உயர் நீதிமன்றம் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment