தீபாவளி கொண்டாட்டம்…. 2,372 பேர் மீது வழக்குப்பதிவு…!!

தமிழகம் முழுவதும் அனுமதிக்கப்படாத நேரத்தில் பட்டாசு வெடித்ததாக 2,372 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கபபட்டுள்ளது.
ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடினாலும் 2018-ல் கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகை வரலாற்றில் இடம் பிடித்து விட்டது. காற்று மாசை குறைப்பதற்காக இந்த ஆண்டு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவில் 7 மணி முதல் 8 மணி வரையிலுமே பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசும் ஆணை போட்டது. இதனால் பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவருமே வருத்தம் அடைந்தனர்.
சென்னை நகரம் நேற்று இரவு 7 மணி முதல் 8 மணி வரை வானில் வண்ண வண்ண நிறங்களில் ஒளிகள் மின்னின. அந்த 1 மணி நேரத்தில் ஏராளமான புகையும் காணப்பட்டது. ஆனால், நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் ஏராளமானோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 188 மற்றும் 285 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் அனுமதிக்கப்படாத நேரத்தில் பட்டாசு வெடித்ததாக 2,176 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை 359, காஞ்சிபுரம் 79, திருவள்ளூர் 105, கோவை 114, மதுரை 134, திருச்சி 45, சேலத்தில் 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
dinasuvadu.com 
author avatar
Dinasuvadu desk

Leave a Comment