தீபாவளியன்று அரசு மருத்துவர்கள் விடுமுறை எடுக்காமல் பணியாற்றுமாறு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.இந்த நிலையில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க தமிழக அரசு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பல்வேறு காய்ச்சல் காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நூற்றுக்கணக்கான மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள காய்ச்சல் பிரிவு தொடர்ந்து இயங்கி வருகிறது.
நவ.6 தீபாவளி என்பதால் மருத்துவர்கள் விடுப்பு எடுக்க கூடாது என்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒரு மருத்துவரும் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சுழற்சி முறையிலும் டாக்டர்கள் பணியாற்ற வேண்டும் மேலும் தீபாவளியன்று நிகலும் தீக்காய பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
DINASUVADU