திருவாரூர் இடைத்தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன்..! பூண்டி கலைவாணன் சூளுரை..!!

திருவாரூர் தொகுதிக்கான இடைதேர்தல் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பூண்டி கலைவாணன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு  நன்றி தெரிவித்துள்ளார்.

முன்னாள் திமுக தலைவரும் ,திருவாரூர் தொகுதி எம்.ஏல்.ஏவும் ஆன கருணாநிதியின் மறைவால் அத்தொகுதி காலியாக உள்ளது.இந்நிலையில் நெடுநாட்களாக இடைதேர்தல் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது திருவாரூர் தொகுதிக்கு வரும் ஜனவரி 28ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அக்கட்சியின் வேட்பாளராக பூண்டி கலைவாணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில்  திமுக தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைரமுருகன், டி.ஆர்.பாலு  இவர்களின் முன்னிலையில் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த அக்கட்சியினரிடையே நேர்காணல் நடைபெற்றது. இந்த நேர்காணலின் முடிவில் பூண்டி கலைவாணன் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தகவல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பூண்டி கலைவாணன் திருவாரூர் இடைத்தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என உறுதி அளித்ததுடன் இடைத்தேர்தலில் போட்டியிட தமக்கு வாய்ப்பளித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தனது நன்றியையும் தெரிவித்தார்.

author avatar
kavitha

Leave a Comment