திருமுருகன்காந்தி கைது..!!திட்டமிட்டு பழிவாங்கும் செயல்..!! மு.க ஸ்டாலின் ..!!

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தியை திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கில் கைது செய்து சிறையில் அடைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என கண்டனத்தை தெரிவித்த மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இது பற்றி பதிவிட்டுள்ளார்.

அதில் மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கில் செயல்பட்ட அதிமுக அரசை நீதிமன்றம் கண்டித்தும், வேண்டுமென்றே மற்றொரு வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது! மக்களின் உரிமைக்குரலை பூட்ஸ் காலால் நசுக்குவது நல்லதல்ல! என்று பதிவிட்டுள்ளார்.
DINASUVADU


DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment