திருநெல்வேலி அருகே மரத்தின் மீது கார் மோதி ஒருவர் பலி!

குற்றால அருவிகளில்  தென்மேற்குப் பருவமழை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தீவிரமாக பெய்து வருவதை தொடர்ந்துநீர்வரத்து அதிகரித்துள்ளது இதனால் தமிழகம் மட்டுமல்லாது வெளி மாவட்டம் வெளி மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம் இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையைச் சேர்ந்த அருணாசலம் என்பவர் மகன் சக்தி என்பவர் தனது குடும்பத்துடன் காரில் வந்துள்ளார்.

குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி புலியருவி மெயின் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளித்து விட்டு பழைய குற்றாலத்தில் குளித்து விட்டு ஊருக்கு செல்வதாக இருந்தது இந்த நிலையில் பழைய குற்றாலம் செல்லும் வழியில் சென்று கொண்டிருந்தபோது கார் எதிர்பாராதவிதமாக ரோட்டில் இருந்த மரத்தின் மீது மோதியது இதில் காரை ஓட்டி வந்த சக்தி என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார் காயமடைந்தவர்களை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து குற்றாலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment