திருச்சியைச் சேர்ந்த ஏழு வயது சிறுவன், 7 மணி நேரம் தொடர் வில் – அம்பு எய்து சாதனை…!!

திருச்சியைச் சேர்ந்த ஏழு வயது சிறுவன், 7 மணி நேரம் தொடர் வில் – அம்பு எய்து சாதனையை நிகழ்த்தியுள்ளார்.தமிழ்நாடு இளம்பிள்ளை சாதனையாளர்களின் புத்தகத்தில் பதிவு செய்வதற்காக இந்த சாதனையை நிகழ்த்தியதாக சிறுவன் ஜீவன் சிவா கூறியுள்ளார். சமயபுரம் அருகே கூத்தூர் ஊராட்சியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஜீவன் சிவா 7 ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.
சிறுவனின் சாதனை குறித்து அவரது தந்தை முத்துக்குமார், ஜீவன் சிவாவுக்கு வில்-அம்பு எய்துவதில் உள்ள ஆர்வத்தை அறிந்து தொடர்ந்து பயிற்சி அளித்து வருகிறோம் என்றும், தொடர் பயிற்சியின் காரணமாகத்தான் இந்த சாதனையை சிறுவன் நிகழ்த்தியதாகவும் அவர் கூறினார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment