திமுக எம்.எல்.ஏ. காந்தி அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு மிரட்டல் எனப் புகார்!

திமுக எம்.எல்.ஏ. காந்தி  வேலூரில் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் செட் டாப் பாக்சுகளை பொருத்தச் சொல்லி மிரட்டுவதாக குற்றம்சாட்டிய தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநலச் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சத்துவாச்சாரியில் உள்ள ஆட்சியர் அலுவலகம் எதிரே இந்த போராட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய கேபிள்டிவி ஆப்ரேட்டர்கள், தங்களை சுமங்கலி கேபிள் விஷன் என்ற தனியார் செட் டாப் பாக்சுக்கு மாறுமாறு கூறி ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் காந்தி மிரட்டுவதாக குற்றம்சாட்டினர்.

இதற்கு அரசு அதிகாரிகளும் உடந்தை என்றும் அவர்கள் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் அவர்கள் புகார் மனு அளித்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment