தினகரன் கன்னிப்பேச்சு பேசும்போது அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் இடைமறித்து பேசக்கூடாது!

சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் விரைவில் கூடவுள்ள சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
பேரவையில் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டி.டி.வி. தினகரன் பேசும் போது, பிரச்னை செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது என தெரிவித்தார்.
சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில், கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக எம்எல்ஏக்களுக்கு முதலமைச்சர் அறிவுரை வழங்கியதாகவும், தினகரன் கன்னிப்பேச்சு பேசும்போது அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் இடைமறித்து பேசக்கூடாது என முதல்வர் கூறியதாகவும்   அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
source: dinasuvadu.com

Leave a Comment