தமிழக அரசே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பொறுப்பு! ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த்,தூத்துக்குடியில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு தமிழக அரசே பொறுப்பு என்று  தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், மக்களின் உணர்வுகளை மதிக்காத அரசின் அலட்சியப்போக்கின் விளைவாக பொதுமக்கள் சுடப்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார். நடந்த வன்முறை மற்றும் பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு என்றும் ரஜினி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment